விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் சட்டையை புகார்

விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண்ணின் சட்டையை புகார்

காவல் நிலையம் 

விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணின் சட்டையை கிழித்ததாக கூறி முத்துக்குமார் என்பவர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் கடம்பன் குளம் பகுதியைச் சார்ந்தவர் ஜேசுதா வயது 43. இவர் புது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் அவருடைய கணவர் கூலி வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இவர் கடந்த ஒரு வருடமாக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலை பார்க்கும் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும்,இவரை கடந்த நான்காம் தேதி மேலாளராக உள்ள முத்துக்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவலை ஜெயசுதாவிற்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்ததாகவும், அதன் பின்பு ஜெயசுதா விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வேலைக்கு வரவில்லை எனவும்,

அது தொடர்ந்து 24 ஆம் தேதி சரண்யா என்ற மற்றொரு நபரையும் முத்துக்குமார் பணியிட மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இருவரும் தங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்வதற்கான ஆணையை வழங்குமாறு முத்துக்குமாரிடம் கேட்டதற்கு அதற்கு முத்துக்குமார் மண்டல மேலாளரிடம் கேட்டுக் கொள்ளுமாறு கூறியதாகவும், இதன் காரணமாக சரண்யா என்பவர் இது குறித்து மருத்துவமனை ARMO விடம் புகார் தெரிவிக்க போவதாக கூறிச் சென்றதாகவும், அதை தடுக்கும் நோக்கில் முத்துக்குமார் ஜெயசுதா கைகளைப் பிடித்து இழுத்ததாகவும், இதைத்தொடர்ந்து ஜெயசுதாவின் சட்டையின் பிடித்து இழுத்து கிழித்து விட்டதாகவும்,

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்த ஜெயசுதா என்பவர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் காவல் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story