அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
![அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு](https://king24x7.com/h-upload/2024/06/30/567902-1000469145.webp)
வழக்குப்பதிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2017-18ம் ஆண்டு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி வேல்முருகன் இப்புகாரின் மீது விசாரணை நடத்தி வந்த நிலையில் தெள்ளார், ஆரணி,ஜவ்வாதுமலை ஆகிய ஒன்றியங்களில் பணியாற்றிய 3 பிடிஓக்கள் உள்பட 24 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Next Story