அண்ணாமலை புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய நபர் மீது புகார்

அண்ணாமலை புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய நபர் மீது புகார்

பையூரில் அண்ணாமலை புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பையூரில் அண்ணாமலை புகைப்படத்தை வைத்து ஆட்டின் தலையை வெட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள பையூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டின் தலையில் பாரதிய ஜனதா கட்சி அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி ஆட்டின் தலையை துண்டித்து கொலை செய்து அண்ணாமலையின் புகைப்படத்தில் ரத்தத்தை தெளித்த ஆசாமிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இத்தக செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சிவப்பிரகாஷ் மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்

Tags

Next Story