ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
நாகர்கோவில் ஏ எஸ் பி -யிடம் புகாரளித்த அதிமுகவினர்
குமரியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் சுகுமாரன் தலைமையில் அதிமுகவினர் நாகர்கோவில் ஏ எஸ் பி யாங்சென் டோமா பூடியாவிடம் ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாகர்கோவில் ஒரு திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அவரது அணியினர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

இந்த கூட்டத்திற்காக வருகை தந்த ஓ பன்னீர் செல்வத்தை வரவேற்கும் வகையில் அதிமுக கொடி மற்றும் பெயரை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எண்ணத்தோடு அந்த அமைப்பினர் பயன்படுத்தி உள்ளனர். குறிப்பாக அந்த அணியின் மாவட்ட செயலாளர்கள் எஸ் ஏ விக்ரமன், பி. டி செல்லப்பன் ஆகியோர் உயர்நீதிமன்ற உத்தரவை மாதிரி தேவையில்லாத சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கி, கலகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு உள்ளனர். எனவே உயர் நீதிமன்ற உத்தரவு மீறி செயல்பட்ட சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறியுள்ளனர்.

Tags

Next Story