விசாரணையின் போது போலீசார் தாக்கியதாக புகார்....!

விசாரணையின் போது போலீசார் தாக்கியதாக புகார்....!
காவல் நிலையம் 
விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீசார் தாக்கியதாக சகோதரர்கள் புகார் அளித்துள்ளானர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் அடுத்த இலுப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன்கள் யுவராஜ் (19), புஷ்பராஜ்(18). யுவராஜ் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார்.

புஷ்பராஜ் ஐடிஐ படித்துள்ளார். கடந்த 21ம்தேதி அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமியின் விவசாய கிணற்றில் மின்மோட்டார் திருடு போனது. அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்த போது, மின் மோட்டாரை 2 இளைஞர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து வீரகனூர் போலீசார், யுவராஜ், புஷ்பராஜ் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக நேற்று காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின் அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், வீரகனூர் போலீசார், விசாரணையின் போது தாக்கியதாககூறி யுவராஜ் மற்றும் புஷ்பராஜ் ஆகிய இருவரும், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்ந்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து எஸ்ஐ அந்தோணி மைக்கேல் கூறுகையில், 'சந்தேகத்தின் பேரில் யுவராஜ், புஷ்பராஜ் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டோம். ஆனால், எவ்வித தகவலும் கிடைக்காத தால், மீண்டும் நாளை விசாரணைக்கு வரும்படி சொல்லி அனுப்பிவிட்டோம்.

அவர்களை அடிக்கவில்லை. அவர்கள் தவறான தகவல் தெரிவித்துள்ளனர்,' என்றார். இதுகுறித்து எஸ்பி அருண் கபிலன் கூறுகையில், 'இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

Tags

Next Story