ராமநாதபுரம் மதுக்கடையை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

ராமநாதபுரம் மதுக்கடையை அகற்றக்கோரி  மாவட்ட ஆட்சியரிடம் புகார் !

புகார்

மது பிரியர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தை அடுத்த காந்தி நகர் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய 6980 என்ற எண் கொண்ட மதுக்கடையில் மது அருந்திவிட்டு மது பிரியர்கள் ஊருக்குள் வந்து அராஜகம் செய்வதாகவும் அவ்வளியே செல்லக்கூடிய பெண்கள் சிறுமிகளிடம் அருவருக்கத்தக்க வகையில் நடந்து வருவதாகவும் கூறி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட மதுபான கடையை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags

Next Story