அரசு மாணவியர் விடுதி காப்பாளினிக்கு பணி நிறைவு விழா

அரசு மாணவியர் விடுதி காப்பாளினிக்கு பணி நிறைவு விழா

பணி நிறைவு விழா

தர்மபுரி மாவட்ட ஒய்வு பெற்று அலுவலர்கள் சங்கத்தில் ஓய்வு பெற்ற அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி காப்பாளினிக்கு பணி நிறைவு பாராட்டு விழா
தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்- ஆசிரியர் நலத்துறை சங்கத்தின் சார்பில் அரூர் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல மாணவியர் விடுதி காப்பாளினி செல்வி பணி நிறைவு பெறுவதை ஒட்டி பணி நிறைவு பாராட்டு விழா தர்மபுரி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் கூட்டரங்கில் நடந்தது. விழாவிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தமிழ்மணி தலைமை வகித்தார்.இவ்விழாவில் அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் தண்டபாணி சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு,சங்கத்தின் சட்ட ஆலோசகர் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் ராஜூ, தங்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாகராஜி வரவேற்றார். ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாணிக்கம், செயலாளர் கந்தசாமி, பொருளாளர் ஜெயபால், மாநில மத்திய செயற்குழு உறுப்பினர் மணி, மாவட்ட துணைத் தலைவர்கள் குணசேகரன், இறுதியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்- ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ஞானவேல் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story