புகைப்பட கலைஞர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி

புகைப்பட கலைஞர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி
கணினி வழங்கும் நிகழ்ச்சி 
நெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது.அந்த வகையில் பாதிக்கப்பட்ட புகைப்பட மற்றும் வீடியோ கலைஞர்களுக்கு முதல் கட்ட நிவாரணமாக கம்ப்யூட்டர் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை சந்திப்பு ஆர்யாஸ் ஹோட்டலில் வைத்து இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீடியோ அண்ட் ஃபோட்டோகிராபர் அசோசியேசன் மாநில தலைவர் சிவக்குமார் கலந்துகொண்டு கம்யூட்டர் வழங்கினார். இதில் 15 உறுப்பினர்களுக்கு தலா 40000 மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டது.

Tags

Next Story