பொன்னமராவதி பேரூராட்சியில் ஊதாமல் கிடக்கும் சங்கு? மீண்டு ஊத வைக்கப்படுமா?

பொன்னமராவதி பேரூராட்சியில் ஊதாமல் கிடக்கும் சங்கு? மீண்டு ஊத வைக்கப்படுமா?

சங்கு

பொன்னமராவதி பேரூராட்சியில் ஊதாமல் கிடக்கும் சங்கு? மீண்டு ஊத வைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொது மக்களை உற்சாகமாக தட்டி எழுப்பும் சங்கு சில மாதங்களாகவே ஊதாமல் கிடக்கும் அவலநிலை. பொன்னமராவதி பேரூராட்சி பகுதி பொன்-புதுப்பட்டியில் வரலாறு சிறப்பு மிகுந்த சங்கு காலை,மதியம்,இரவு என மூன்று நேரங்களிலும் ஒலி எழுப்பி மக்களை உற்சாகப்படுத்தி எழுப்பி வந்தது.

இச்சங்கு பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்த நிலையில் பொன்னமராவதிக்கு கிடைத்த பொக்கிசமான அன்றைய பேரூராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி அவர்களின் பெரும் முயற்சியில் இந்த சங்கு மீண்டும் ஒலிக்க தொடங்கியது. ஆனால் தற்போது சில மாதங்களாகவே இந்த சங்கு ஒலிக்காமல் பழுதடைந்து கிடப்பதை பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன் உடனடியாக சரி செய்து மீண்டும் சங்கு ஊத செய்ய வேண்டும் என்று பொன்னமராவதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் வரலாறு சிறப்பு மிகுந்த பொன்னமராவதி, மேலைச்சிவபுரி ஆகிய பகுதியில் மட்டும் இச்சங்கு ஒலி எழுப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story