சேந்தமங்கலத்தில் விசிக சார்பில் கண்டண தொடர்முழக்க போராட்டம் !

சேந்தமங்கலத்தில் இன்று மே-6 விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கண்டண தொடர்முழக்க போராட்டம் நடைபெற்றது.

கடந்த 26 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சேந்தமங்கலம் தொகுதி செயலாளர் பணரோசா மற்றும் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் உதயகுமார் உள்ளிட்ட உடன் பணியாற்றியவர்களை திட்டமிட்டு கூலிப்படையை வைத்து படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு வெட்டி கையை துண்டாக்கிய கூலிப்படை குற்றவாளிகளை தப்பிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கோடு வழிப்பறிக்காக நடந்த சம்பவம் என்று போலீஸ் வழக்கை திசைமாற்றம் செய்வதை கண்டித்தும் கூலிப்படையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி நாளை 06.05.2024 திங்கட்கிழமை அன்று சேந்தமங்கலம் கடைவீதி சின்னதேர்முட்டி அருகே மாபெரும் கண்டன தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது.

இதில் விசிக பொருப்பாளர்கள்:வ.அரசன்,இன்பரசன்,நல்லதம்பி,ராஜராஜசோழன்,நடராஜன்,கபிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story