ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன்  இரங்கல்

கணேசமூர்த்தி மறைவு

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்: தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல்

ஈரோடு தொகுதியின் சிட்டிங் எம்.பி.யாக இருந்த கணேசமூர்த்தி இன்று காலை மாரடைப்பால் இயற்கை எய்தினார்.ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் மறைவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மதிமுக வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. கணேசமூர்த்தி அவர்கள், மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது பிரிவால் வாடும் மதிமுக நிர்வாகிகள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags

Next Story