திருமணம் உறுதி செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருமணம் உறுதி செய்யப்பட்ட தனியார் நிறுவன ஊழியர்  தற்கொலை

தற்கொலை 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் வடமாவந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் விவசாயி. இவரது மகன் விஜய் 26. டிப்ளமோ படித்துள்ளார் இவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக செய்யாறு மாங்காலில் உள்ள சிப்காட் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரை கடந்த மூன்று ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளும்படி பெற்றோர் கூறியதாகவும் தெரிகிறது. அவர் தொடர்ந்துமறுப்பு தெரிவித்த வந்த நிலையில் பெற்றோரின் தொடர் வற்புறுத்ததால் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன் அருகே உள்ள கிராமத்திலிருந்து பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டதாக தெரிய வருகிறது.

ஆனால் அதற்குப் பிறகு விஜய் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நீண்ட நேரம் ஆகியும் விஜய் எழுந்திருக்கவில்லை எனவும், இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை திறந்து பார்த்தபோது மின்விசிரியில் சேலை கொண்டு தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்ததாகவும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு வெம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் விஜய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தந்தை ராஜேந்திரன் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story