தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்!

வேலூர் மாநகராட்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

வேலூர் மாநகராட்யில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட ரயில்வே நிலைய பகுதிகளில் சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.அவர்கள் 9 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என ஆய்வு செய்தனர். அதில் 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்த 2 கடைகளுக்கு ரூ.500 வீதம் 2 கடைக்கு ரூ.1,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story