தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகள்

தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரகண்டநல்லுார் அடுத்த வீரசோழபுரம் தென்பெண்ணையாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் ராஜமன்னார் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மணல் ஏற்றிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, வீரசோழபுரம் ஞானவேல், ராமதாஸ்,ராஜி, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, ஞானவேலை கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story