ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட  கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல்

டெல்லியில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை ரயில்வே காவல்துறையினர்பறிமுதல் செய்தனர்
தில்லியிலிருந்து வந்த நிஜாமுதீன் விரைவு ரயிலில் கடத்தி வரப்பட்ட 2 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.தில்லியிலிருந்து கடந்த 28-ஆம் தேதி மதுரை நோக்கி புறப்பட்ட நிஜாமுதீன் விரைவு ரயில் வியாழக்கிழமை அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அப்போது, இந்த ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக திண்டுக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், காவல் ஆய்வாளா் சுனில்குமாா் தலைமையிலான போலீஸாா் இந்த ரயிலில் சோதனை மேற்கொண்டனா். அப்போது ரயில் என்ஜினுக்கு அருகிலிருந்த முன்பதிவில்லாத பெட்டியில் ஒரு பையை போலீஸாா் கைப்பற்றி சோதனையிட்ட போது அதில் 2 கிலோ கஞ்சா இருந்தது.அதனை போலிசார் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story