ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

ரயிலில் கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் டாட்டா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. அப்போது அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்துபோது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பையை சோதனை செய்தனர். அதில் சுமார் 6 கி கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து காஞ்சீபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story