உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற தங்கம் பறிமுதல் !

உரிய ஆவணமின்றி கொண்டுச் சென்ற  தங்கம் பறிமுதல் !

பறக்கும் படை

ராசிபுரம் அருகே உரிய ஆவணம் இல்லாமல் மதுரைக்கு கொண்டுச் சென்ற ரூ.8.78 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மல்லூர் சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி செங்குட்டுவேல் தலைமையில், காவல் துறை உதவியோடு சேலத்தில் இருந்து வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சேலத்தில் இருந்து மதுரைக்கு BVC Logistics என்ற பெயர் கொண்ட வாகனத்தில், ஓட்டுனர், துப்பாக்கி ஏந்திய நபர் உள்ளிட்ட 3 பேர், 8 பண்டல், 4 பெட்டிகளில் 13 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளியை சேலம் - மதுரை கொண்டு சென்றது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றதால் அதனை பறிமுதல் செய்த அதிகாரி, ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கம் ஒப்படைத்தார். இவை அனைத்தும் ராசிபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன. உரிய ஆவணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகள் எது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story