உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் பேண்ட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த 494 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு துபாயில் இருந்து கொழும்பு வழியாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவர் தனது பேண்ட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த ரூபாய் 31 லட்சத்து 9 ஆயிரம் மதிப்புள்ள 494 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூபாய் 4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள 3 ஐ ஃபோன்கள், 3 லேப்டாப்கள், 10 வாட்ச் டயல்கள் ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story