அதிக ஒலி எழுப்பும் கருவிகள் பறிமுதல்

அதிக ஒலி எழுப்பும்  கருவிகள் பறிமுதல்

அதிக ஒலி எழுப்பும் கருவிகள் பறிமுதல்

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒளி எழுப்பும் கருவிகளால் பொதுமக்கள் அச்சமடைவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா திடீர் பேருந்து நிலையங்களில் உள்ள பேருந்துகளில் உள்ள கருவிகள் சோதனை செய்து அதனை பறிமுதல் செய்தனர். அதிக ஒலி எழுப்பும் கருவிகளால் இருசக்கர வாகன ஓட்டிகளும் முதியவர்களும் சாலையில் செல்லும்போது அச்சம் அடைவதாகவும் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் ஓட்டுனர்களுக்கு அறிவுரை கூறினார். பின்னர் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்தும் பேருந்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Tags

Next Story