மாடு வியாபாரி எடுத்து சென்ற 1.68 லட்சம் பறிமுதல்

மாடு வியாபாரி எடுத்து சென்ற 1.68 லட்சம் பறிமுதல்

பணம் பறிமுதல்

தியாகதுருகம் அருகே உரிய ஆவணமின்றி மாடு வியாபாரி எடுத்து சென்ற 1.68 லட்சம் ரூபாயை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.

சின்னசேலம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அசோக் தலைமையிலான பறக்கும்படை குழுவினர், நேற்று காலை 9:05 மணியளவில் தியாகதுருகம் புறவழிச்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மகேந்திரா பிக் அப் லோடு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், எறையூர் கிராமத்தை சேர்ந்த மாடு வியாபாரியான அந்தோணிசாமி, 55; ஆவணமின்றி 1 லட்சத்து 68 ஆயிரத்து 200 ரூபாய் எடுத்துச் சென்றது தெரிந்தது. ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து, கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story