ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல்

பணம் பறிமுதல்

திருவாரூர் மாவட்டம்,வலிவலம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துசெல்லப்பட்ட ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் திருவாரூர் அருகே வேப்பந்தாங்குடி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஸ்வநாதன் தலைமையில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் உதயகுமார் தலைமை காவலர் சரவணகுமார் உட்பட வாகன சோதனையின் போது வலிவலம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிகல் கடை உரிமையாளர் ரஜினி என்பவர் காரில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணம் ஆவணம் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்து திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story