உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்!

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்!

பணம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 1.25 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வந்தவாசி- மேல்மருவத்தூர் சாலை, கீழ்சீசமங்கலம் கூட்டுச் சாலை அருகே பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்தவாசியிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கிச் சென்ற மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

சோதனையில் மீன் வியாபாரி சிவக்குமார் என்பவர் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த‌ ரூ.1.25 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story