வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் பறிமுதல்

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் பறிமுதல்

பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

கவுண்டம்பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த நபரை பாஜகவினர் பிடித்து பறக்கும் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியம் பாளையத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த நிலையில் ஒருவரை பிடித்த பா.ஜ.கவினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.கோவை மக்களவை தொகுதியில் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.

நேற்றிரவு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் திமுகவினர் பணபட்டுவா செய்து வந்ததாக கூறப்படுகின்றது.இந்நிலையில் அங்கு சென்ற பா.ஜ.கவினர் ஒருவரை பிடித்து பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.பிடிபட்ட நபரிடம் இருந்து 42,500 பறிமுதல் செய்யபட்டு பிடிபட்ட நபரை தேர்தல் அதிகாரிகளிடம் அவர்கள் ஒப்படைத்தனர். வாக்காளர்களுக்கு முதல்கட்ட பணபட்டுவாடாவை திமுகவினர் துவங்கியுள்ள நிலையில் மற்ற பகுதிகளில் பிற அரசியல் கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்து வருவது குறிப்பிடதக்கது.

Tags

Next Story