குடும்பத்தகராறில் மோதல்:6 பேர் காயம்!

குடும்பத்தகராறில் மோதல்:6 பேர் காயம்!

குடும்பத்தகராறில் மோதல்:6 பேர் காயம்

குடும்பத்தகராறில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அருகே உள்ள ராவுத்தன் பட்டியை சேர்ந்தவர் சரவணகுமார் (32). இவரது மனைவி சித்ராதேவி(28). இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்ட நிலையில் சித்ராதேவி கோபித்துக் கொண்டு கண்ணனுாரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மனைவியை அழைத்து வருவதற்காக சரவணகுமார் தனது சகோதரர் சுரேஷ்குமாருடன் கண்ணனூருக்கு சென்றார். ஆனால், சித்ரா தேவியை அனுப்ப அவரது தாயார் மறுப்பு தெரிவித்து மருமகனை திட்டினார். தகராறு முற்றியதில் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கம்பு, அரிவாளால் தாக்கிக்கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உறவினர்கள் மீட்டு திருமயம்,புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக பனையப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story