பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவருக்கு நேரில் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவருக்கு நேரில் வாழ்த்து

மதுரையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் நாச்சியாரை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.


மதுரையில் பத்மஸ்ரீ விருது பெற்ற மருத்துவர் நாச்சியாரை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மதுரையில்பத்மஸ்ரீ விருது வழங்கி டாக்டர் நாச்சியார் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் R.B உதயகுமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் கடந்த மே 9 ஆம் தேதி மத்திய அரசின் சார்பாக அரவிந்த் கண் மருத்துவமனைகளின் இயக்குனர் டாக்டர் நாச்சியாருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. டாக்டர்.G.நாச்சியாரின் உடன் பிறந்த சகோதரர் டாக்டர் G.வெங்கிடசாமியால் அரவிந்த் கண் மருத்துவமனை கடந்த 1976-இல் ஆரம்பிக்கப்பட்டது. இவருக்கு கடந்த 1993ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டாக்டர். G.நாச்சியாரின் கணவர் டாக்டர் P.நம்பெருமாள்சாமி ஆரம்ப கால நிறுவன உறுப்பினராகவும் மருத்துவமனை வளர்ச்சிக்கு சிறப்புற பணியாற்றி கொண்டுள்ளார். இவருக்கு கடந்த 2007ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இன்று டாக்டர் நாச்சியார் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்பாரதி யுவகேந்திரா அதன் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர் பேட்டி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

Tags

Next Story