டாக்டர் பட்டம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டரிடம் வாழ்த்து

டாக்டர் பட்டம் பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் கலெக்டரிடம் வாழ்த்து

ஆட்சியரிடம் வாழ்த்து பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்

சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வடபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜிடம் வாழ்த்து பெற்றார்

சவுத்தர்ன் அமெரிக்கன் யுனிவர்சிட்டி சார்பில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நபர்களை தேர்ந்தெடுத்து கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.. அதன் ஒரு பகுதியாக சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்கும் விழா,

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களில் பல்வேறு வகையில் பொதுமக்களுக்கு சிறப்பாக சேவைகளை செய்த வடபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதத்திற்கு சிறந்த சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது.

அதன் படி செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றிய வடபட்டினம் ஊராட்சி மன்ற தலைவரும், ஊராட்சி ஒன்றிய தலைவர்களின் கூட்டமைப்பின் துணை தலைவருமான வேலாயுதத்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது... அதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்..

சிறந்த சமூக சேவைக்கான கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற வடபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் வேலாயுதத்திற்கு சால்வை அணிவித்ததுடன் டாக்டர் பட்டத்தினை வழங்கி இன்னும் மக்கள் பணிகள் செய்து பல சாதனைகளை பெற வேண்டும் என ஆட்சியர் அருண்ராஜ் வாழ்த்தினார்..அதனை தொடர்ந்து சிறந்த மக்கள் பணிக்கான கலைஞர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story