பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்த்து

பொதுத்தேர்வு எழுதும் மாணவிகளுக்கு வாழ்த்து

மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது

பொதுத் தேர்வு எழுதும் ஆவரங்காடு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு ரோஜா பூ கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் +2 பொதுத்தேர்வுகள் வெள்ளியன்று துவங்கியது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ,கல்வி பயிலும் பிளஸ் டூ மாணவிகள் சுமார் 282 பேர் பொதுத்தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வருகை தந்தனர்.

அவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் உள்ளிட்டோர் ரோஜா பூ கொடுத்து சிறப்பாக தேர்வு எழுத வேண்டுமென மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து பிளஸ் 2 தேர்வு நடைபெறுவதால், பள்ளியில் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது.

Tags

Next Story