கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
மாணவர்களுக்கு பரிசு வழங்குதல்
கடலூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கிராமிய நடனத்தில் பங்கு பெற்ற அனுசியா, காவியா, கவிப்பிரியா, பிரேம் குமார், சைலஜா, அனுஷ்கா, அகில், தீபிகா மற்றும் ரஞ்சனா ஆகிய மாணவர்கள் இரண்டாம் இடமும், தனி நடிப்பு போட்டியில் கலையரசி மூன்றாம் இடம் பெற்று சாதனை பெற்றுள்ளனர். குறிஞ்சிப்பாடி அளவில் நடைபெற்ற தனி நடிப்பு போட்டியில் புவனா இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இதனை பாராட்டும் வகையில் பள்ளி தலைமையாசிரியர் கௌரி பரிசுகளை வழங்கி பாராட்டினார். உதவி தலைமையாசிரியர் வரதராஜன், ஆசிரியர்கள் ரேனுகாதேவி, காந்திமதி, ஞானசங்கர், தனபால், சுதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story