காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

காங்., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் டெல்டா மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பெஞ்சமின் இளங்கோ புதிய மாவட்ட தலைவர்கள் ராம.சுப்புராம், முருகேசன், மாவட்ட கலை பிரிவு தலைவர்கள் மயில்வாகனன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தலுக்கான ஓட்டு சாவடி முகவர்கள் நியமனம், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பிரச்சாரம் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

புதிதாக நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் சூர்யா, பழனியப்பன், ராகுல்ராஜ், முருகேசன், கணேசன், மகளிரணி தலைவர் சிவந்தி மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர் ,கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story