காங்கிரஸ் பிரச்சார பொது கூட்டம்- செல்வப்பெருந்தகை  பங்கேற்பு

காங்கிரஸ் பிரச்சார பொது கூட்டம்- செல்வப்பெருந்தகை  பங்கேற்பு
நாகர்கோவிலில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம்
கன்னியாகுமரி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடைப்பெற்ற பிரச்சாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பங்கேற்றார்.

கன்னியாகுமரி மாவட்டம நாகர்கோவிலில் இந்தியா கூட்டணி சார்பில் நடந்த மாபெரும் பிரசார பொது கூட்டத்தில், தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். அப்போது அவர் பிரசாரத்தில் பேசியதாவது, ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறியுள்ளோம். காங்கிரஸ் ஆட்சியின் போது கொடுத்த வாக்குறுதிகள் 100% நிறைவேறப்பட்டுள்ளன. மு க ஸ்டாலின் 80 சதவீதம் வாக்குறுதிகளை இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளார்.

நவீன ஊழல்வாதி மோடி என்று உலக நாடுகள் சொல்லுகிறது. விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்துள்ளார். ஊழலை ஒழிப்பதாக கூறியவர் ஊழலில் சிக்கி உள்ளார். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், விஜய் வசந்த், மேயர் மகேஷ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் திரு ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் தாரகை கத்பர்ட், இந்தியா கூட்டணி கட்சி மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story