அன்னவாசலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரம்!

அன்னவாசலில் காங்கிரஸ் வேட்பாளர்  ஜோதிமணி பிரச்சாரம்!

காங்கிரஸ் வேட்பாளர்

விராலிமலை பேரவைத் தொகுதி, அன்னவாசலில் காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட விராலிமலை பேரவைத் தொகுதி, அன்னவாசலில் காங்கிரஸ் வேட்பாளர் செ. ஜோதிமணி பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் அவர் பேசியது: அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான சி. விஜயபாஸ்கர் தொகுதிக்கென எதுவும் செய்யவில்லை. மாறாக, எம்பியாக நான் தொகுதியில் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளேன். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், தொகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனைகளுக்கு கூட வெண்டிலேட்டர் வசதியை அவர் செய்து தரவில்லை. அவர் கல்வி நிறுவனங்களை நடத்தி வருவதாலேயே தொகுதிக்கு கலைக் கல்லூரியை கொண்டு வரவில்லை. போதைப் பொருள்களை கட்டுப்படுத்த வேண்டியவர், குட்கா விவகாரத்தில் சிக்கி அந்த வழக்கு தற்போதும் நிலுவையில் உள்ளது. அதிமுக குறித்தும், விஜயபாஸ்கர் குறித்தும் புகார் தெரிவித்து பேசினார். எனவே, வரும் தேர்தலில் அதிமுகவை புறக்கணித்து இந்தியா கூட்டணிக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரித்தார் ஜோதிமணி.

Tags

Next Story