காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் அறிமுகக் கூட்டம்!

சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
பொன்னமராவதியில் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திசிதம்பரம் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்து பேசுகையில், வேட்பாளர் கார்த்திசிதம்பரம் வரலாற்று வெற்றி பெற கூட்டணியினர் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், பாஜக ஆட்சி தொடர்ந்தால் இதுதான் கடைசித் தேர்தலாக இருக்கும். நாட்டில் சர்வாதிகாரம் ஒங்கி ஜனநாயகம் பிழைத்திருக்காது என்றார். தொடர்ந்து, சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், நாட்டில் ஜனநாயகம் தழைக்கவும், தலிவுற்ற, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வு மேம்பட திமுக- காங்கிரஸ் கூட்டணியை நலிவுற்ற, ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வு மேம்பட திமுக- காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச்செய்யுங்கள் என்றார். கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ். பழனிப்பன், திமுக ஒன்றியச் செயலர்கள் அ. அடைக்கலமணி, அ. முத்து, நகரச் செயலர் அ. அழகப்பன் மற்றும் இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story