கடல் சீற்ற பகுதிகளை பார்வையிட்ட காங்கிரஸ் வேட்பாளர் !

கடல் சீற்ற பகுதிகளை பார்வையிட்ட காங்கிரஸ் வேட்பாளர் !

விஜய் வசந்த்

காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் மீனவ கிராமமான ஆரோக்கியபுரம், சின்ன முட்டம், மணக்குடி, மேலமணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி மீனவ மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கடற்கரை பகுதிகளில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதில் கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான ஏராளம் கடற்கரை கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் இண்டியா கூட்டணி சார்பில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் விஜய் வசந்த் மீனவ கிராமமான ஆரோக்கியபுரம், சின்ன முட்டம், மணக்குடி, மேலமணக்குடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு கோரி மீனவ மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின் மேலமணக்குடி பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வருங்காலத்தில் இது போன்ற பாதிப்பு ஏற்படாத வகையில் வண்ணம் எடுக்கப்படும் என வேட்பாளர் விஜய் வசந்த் தெரிவித்தார்.

Tags

Next Story