வேட்பாளரின் பெயரை மாற்றி கூறிய செல்வப் பெருந்தகை

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரின் பெயரை வாணி ஸ்ரீ குமார் என கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் அவருக்கு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை பேருந்து நிலையம் அருகில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது பொதுமக்களிடையே வாக்கு சேகரிக்கும் போது வேட்பாளர் பெயர் தெரியாமல் உதயசூரியனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே இருந்தார்

.பின்னர் அருகில் உள்ளவரிடம் தொகுதியின் வேட்பாளர் பெயரை கேட்ட போது அவர் வாணி ஸ்ரீ குமார் என்று கூறிய நிலையில் தொடர்ந்து வாணி ஸ்ரீ குமாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது. மேலும் கூட்டத்தில் ஒவ்வொரு கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளின் பெயரை செல்வப் பெருந்தகை சொன்னபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பொன்னுப்பாண்டியன் பெயரை சொல்ல மறந்ததால் தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் முன்னாள் எம்எல்ஏ பொன்னுப்பாண்டியன் சமாதானம் செய்தார்.

Tags

Next Story