காங்கிரஸ் சார்பில் மகாத்மா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு நாமக்கல் நகர காங்கிரஸ் கட்சியினர் காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, நாமக்கல் நகர காங்கிரஸ் சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி, காந்தி சிலை அருகில் நடைபெற்றது, கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சித்திக் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் தலைவர் மோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன், மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவுத் தலைவர் பொன்முடி, செல்வம், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோ, ராஜேந்திரன், நகர காங்கிரஸ் நிர்வாகிகள் சாந்தி மணி, நடேசன், தாஜ், செல்வம், லோகநாதன், ஜபூருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டு காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினனர். பின்னர் அவர்கள் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story