தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி - காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி - காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி 

திருச்சியில் இனிப்பு வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
நடந்து முடிந்த ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநில தேர்தல்களில் மிசோரம் அதை தவிர்த்து மற்ற நான்கு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தெலுங்கானா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் வெடிவெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான அருணாச்சலம் மன்றத்தில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் மற்றும் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story