காங்கிரஸ் கட்சி அறிக்கை: வானதி சீனிவாசன் கருத்து

காங்கிரஸ் கட்சியின் அறிக்கை மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டாடாபாத் பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது.இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கொட்டிய இடத்தை பூங்காவாக மாற்ற பூமி பூஜை போட்டுள்ளதாகவும் மாநகர பகுதிகளில் அதிக பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருவதாக தெரிவித்தார்.

கோவை பாஜகவினர் ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அழைப்பிதழ் மற்றும் அக்கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர் என்றவர் அந்த அட்சதையை மக்கள் ஆர்வமாகவும் பயபக்தியுடன் வாங்கி வாங்கி கொள்வதாக தெதிவித்தார்.

ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பெரிய திரையில் திரையிடவும்,பஜனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறியவர் மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்க முடிவதாக கூறினார்.கலாச்சார அடையாளமான ராமர் பிறந்த இடத்தில் சட்ட பூர்வமாக நியாயமான முறையில் கோவில் கட்டப்பட்டுள்ளது எனவும் கோடிக்கணக்கான மக்கள் இதனால் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் அயோத்திக்கு செல்ல பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

என்றவர் அவர்கள் சென்று வர மத்திய அரசு தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியிடும் என்றார். ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்துள்ளது. ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும் அவர்களது சுய லாபத்திற்காக தள்ளி போட்டதாகவும் இது பாஜக,ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் என காங்கிரஸ் சொல்லி வருகின்றனர்

ஆனால் ராமர் கோவிலை பாஜகவோ ஆர்எஸ்எஸ் அமைப்போ கட்டவில்லை எனவும் இந்த கோவில் ராமரை வணங்கும் அத்தனை பேருக்கும் பொதுவான கோவில் என்றார்.கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்து இருப்பது கண்டனத்திற்குரியது எனவும் மக்களின் மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்றவர் காங்கிரஸ் கட்சியின் அறிக்கை மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளதாக இருப்பதாகவும் இதற்காக அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். கோவில் கும்பாபிஷேகத்தில் சில சமய தலைவர்கள் மாற்றுக் கருத்து சொல்வது இயல்பானது எனவும் சமய தலைவர்கள் சொல்வதற்கும்,இரு கட்சி சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றும் அரைகுறையாக முடிக்கபட்டு விழா நடைபெறவில்லை என்றவர்,

கோவிலை சுற்றியுள்ள பகுதி கட்டுமானங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும் என்றார். ராகுல் காந்தி நடைபயணத்தால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை எனவும் அவருக்கு சிக்கல் இல்லாமல் இருந்தால் சரி என்றார்.கோவையின் தொழில் வளர்ச்சி என்பது முக்கியமானது எனவும் சென்னைக்கு அடுத்து கோவை தான் அதிக வருமானம் தருவதாக கூறியவர் தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பதில் தாமதம்,கோவை விமான நிலம் எடுப்பதில் தாமதம் என பல்வேறு காரணங்களால் பாதிக்கபடுவதாகவும் கோவையின் வளர்ச்சி புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஆண்டுதோறும் அயோத்திக்கு ஒரு இலட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்ய வேண்டும் என்றவர் திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும் எனவும் பெரும்பான்மை மக்களை பிரித்து பார்க்காமலும் நம்பிக்கைகளுக்கு எதிராகவும் இருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

Tags

Next Story