பிரதமர் வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு

பிரதமர் வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு
 போராட்டம்
பிரதமர் வருகைக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்,புதியதாக கட்டப்பட்டுள்ள 500 மெகா வாட்டுத் திறன் கொண்ட பாவ்னி என்கிற அணுஉலையில் , எரிபொருள் நிரப்பும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவங்கி வைக்கிறார். இதற்காக விமான மூலம் சென்னை வந்தடையும் பிரதமர் மோடி, ஹெலிகாப்டர் மூலமாக கல்பாக்கம் அனுமின் நிலையத்திற்கு வருகை தர உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலூன்களை பறக்க விட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில், 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் வெங்கம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திடீரென காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர், கோ பேக் மோடி என கோஷங்களை எழுப்பி போற இடத்தில் ஈஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் இடம் போலீசார் இது போன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தல் வழங்கி, போராட்டக்காரர்களை குண்டுகட்டாக கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Tags

Next Story