பாஜக அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

பாஜக அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் இந்திய அமைதி யாத்திரைக்கு தடை விதித்த அசாம் மாநில அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து சாத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் சாத்தூர் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயண யாத்திரை தடை செய்த அசாம் மாநில அரசு மற்றும் பிஜேபி அரசை கண்டித்து சாத்தூர் நகர மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மாவட்ட பொது செயலாளர் ஜோதி நிவாஸ் தலைமை தாங்கினார். சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் சாத்தூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுப்பையா சாத்தூர் மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் கும்கி கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளும் இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகிலா காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் தொண்டர்களும் நிர்வாகிகளும் என பலர் கலந்து கொண்டு அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பாரத்ஜோடோ நியாய் யாத்திரையில்,தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பயணம் மேற்கொண்ட பேருந்தை வழிமறித்து தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசையும் பாசிச பாஜகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது அசாம் மாநில அரசை கண்டித்தும் பிஜேபி கட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story