மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் நூறுநாள் வேலைக்கு ஊதியம் வழங்காததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மகாத்மா காந்தி தேசிய ஊரசக 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி ஊதியம் வழங்காமல் இழுத்தடித்துவரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து ராமநாதபுரம் வட்டார காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் காருகுடி சேகர் தலைமையில் பாரதி நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளரும் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகி சோ.பா.ரங்கநாதன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் வாணி இப்ராஹிம், ஆனந்தகுமார், சிவனாண்டி, நகர் தலைவர் கோபி, முன்னாள் ராணுவத்தினர் அணி தலைவர் கோபால், மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், ஒபிசி அணி மாவட்ட தலைவர் பாஸ்கர சேதுபதி உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags

Next Story