கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் 152 பேரை சஸ்பெண்ட் செய்த மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் இளையராஜா, நகர கவுன்சிலர் தேவராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வீரமுத்து, துரைராஜ், இளவரசன், மாவட்ட நிர்வாகிகள் மாதேஸ்வரன், பவுனம்மாள், வட்டார தலைவர் கிருபானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் குமார் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், லோக்சபாவில் காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து கண்டன உரையாற்றினர்.

Tags

Next Story