தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் ஆணையர் நியமன விவகாரம் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேர்தல் ஆணையர்களைத்தேர்வு செய்யும் குழுவில் பழைய முறைப்படி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பட்டியலின பிரிவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பட்டியலின பிரிவின் வடக்கு மாவட்டத் தலைவர் பி. பால்ராஜ், தெற்கு மாவட்டத் தலைவர் பழனிவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி. முருகேசன், தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம சுப்புராம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ம. முருகானந்தம், சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் இப்ராஹிம் பாபு, புதுக்கோட்டை வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன், நகர்மன்ற உறுப்பினர் ஜே. ராஜா முகமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டு பேசினர். தேர்தல் ஆணையர்களைநியமிக்கும் உயர்நிலை குழுவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை எடுத்துவிட்டு பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரை சேர்த்துக் கொள்ளலாம் என சட்டத் திருத்தம் செய்த பாஜக அரசின் செயலைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Tags

Next Story