டோல்கேட்டில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம்  சமயபுரம் அருகே டோல்கேட்டில் மத்திய அரசை கண்டித்து வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் தமிழக மீனவர்களின் வாழ்வை வஞ்சித்தும், மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்வதையும், தொடர்ந்து அவர்களது படகுகளை சேதப்படுத்தியும், மீனவர்களை சிறை தண்டனையிலிருந்து மீட்காதையும் மீனவர்களுக்கு ஆதரவாக மத்திய பாஜக அரசு செயல்படவில்லை எனக் கூறி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய,நகர,வட்ட,பகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story