காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம்

காங்கிரஸ் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம்
கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராஜேஷ்குமார் எம் எல் ஏ
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்கு சாவடி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கடையில் நடைபெற்றது.

குமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புதுக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நேற்று மாலை நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் ரெகுபதி, ராஜசேகரன், விஜயகுமார், பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:- இன்னும் 20 நாட்களில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிடும். தமிழகத்தை பொறுத்தமட்டில் முதற்கட்டமாக தேர்தல் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. நடைபெறவுள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் குமரி தொகுதியில் நமது தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிடுவதாக நினைத்து தேர்தல் பணியாற்றி ராகுல் காந்தி அவர்களை பாரத பிரதமராக்குவதற்கு நாம் தீவிரமாக உழைக்க வேண்டும். என்று கூறினார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் வசந்த் எம்.பி, குமரி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான ராஜ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மற்றும் மாநில, பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், ஊராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட, வட்டார நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story