ராகுல் காந்தி மீதான தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் முத்த தலைவர் ராகுல் காந்தியின் மக்கள் நீதி பயணத்திற்கு அச்சுறுத்தல்களையும், தடைகளையும் செய்யும் அசாம் மாநில பாஜக அரசை கண்டித்து திருவாடனையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழ தலைவர் ராமசாமி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி அசாம் மாநிலத்தில் பாரத் ஜோடோ நியாய யாத்திராவின் போது பிஜேபி யினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதற்கு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தினை திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கருமாணிக்கம் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கட்சி கொடியினை ஏற்றி வைத்தி கண்டன கோசம் எழுப்பினார்கள். இந்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய மீனவரணி தலைவர் ஆம்ஸ்ட்ராங். முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, திருவாடானை வட்டார தலைவர் கணேசன். மகளிர் அணி ராமலெட்சுமி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சி மாவட்ட பொது செயலாளர் சாம்பு அலிஅக்பர் நன்றி கூறினார்.

Tags

Next Story