எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

எஸ்பிஐ வங்கியை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் 
தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு வந்த நன்கொடை விபரங்களை வெளியிட காலதாமதப்படுத்துவம் எஸ்பிஐ வங்கியை கண்டித்து பெரம்பலூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நன்கொடை தகவலை வெளியிடாத எஸ்பிஐ வங்கி மற்றும் மோடி அரசின் செயலை கண்டித்து கண்டனம் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story