கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

தேசப்பிதா காந்தியடிகளையும், சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேசப்பிதா காந்தியடிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் உயர்ந்த நீந்த காங்கிரஸ் தியாகிகளையும் கொச்சைப்படுத்திய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை முன்பு திருச்சி எம்பி சு.திருநாவுக்கரசர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் திருநாவுக்கரசர் எம்.பி பேசும்போது மத்திய பாஜக அரசு புள்ளி விவரங்களை கூறுகிறது. புள்ளி விபரங்களால் ஏழைகளின் வயிற்றுப் பசி ஆறாது. மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார் அப்படி என்றால் இந்த 10 ஆண்டுகளில் 20 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். அதை செய்தாரா? வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றார். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story