நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - எம்.பி பங்கேற்பு

நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - எம்.பி பங்கேற்பு

 காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - எம்.பி பங்கேற்பு
தேர்தல் பத்திரம் தொடர்பான ஊழலில், உச்சநீதிமன்றம் சுட்டி காட்டிய பின்னரும் பா. ஜ. க அரசை பாதுகாக்கும் விதமாக செயல்படும் பாரதஸ்டேட் வங்கியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் குமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பாரதஸ்டேட்வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டி நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன உரை ஆற்றினார். போராட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story