மணிக்கூண்டு அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மணிக்கூண்டு அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மணிக்கூண்டு அருகே காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் மீது புகை குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு திண்டுக்கல் மணிக்கூண்டு காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் மக்கள் அவை உறுப்பினர்கள் மீது புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாவட்ட மாநகர காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது பார்வையாளர் மாட பகுதியிலிருந்து இருவர் வண்ண புகை குண்டுவை நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினர்கள் அமரும் பகுதிக்குள் வீசினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனை கண்டிக்கும் விதமாக திண்டுக்கல் மாநகராட்சி அருகே மணிக்கூண்டு எதிரில் திண்டுக்கல் மாவட்ட மாநகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story