செங்கல்பட்டு அருகே திமுக சேர்மனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்

செங்கல்பட்டு அருகே திமுக சேர்மனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்
தி.மு.க., சேர்மனை கண்டித்து போஸ்டர் ஒட்டிய காங்கிரஸ்
செங்கல்பட்டு அருகே திமுக சேர்மனை கண்டித்து காங்கிரஸ் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஒன்றியத்தில் 43 ஊராட்சிகள் உள்ளன. இதில், 16 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., ஒன்றிய செயலர் ஏழுமலை சித்தாமூர் சேர்மனாக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியையும், வட்டார தலைவர்களையும் புறக்கணித்து வருகின்றனர். மேலும், தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவதால், காங்., தொண்டர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகிஉள்ளனர்.

இதை தொடர்ந்து, ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் விலை போகும் சித்தாமூர் ஒன்றிய செயலரான ஏழுமலையை கண்டித்து, மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தை, வரும் 24ம் தேதி பி.டி.ஓ., அலுவலகம் அருகே நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சித்தாமூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், சாலை சந்திப்பு, பொது இடங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் சில மாதங்களில் பார்லிமென்ட் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இண்டியா கூட்டணி கட்சியினர் இடையே ஏற்பட்டு உள்ள இந்த மோதல் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

Tags

Next Story